பாடல் 361 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .....
தானத் தான தான தனதன தானத் தான தான தனதன தானத் தான தான தனதன ...... தனதான |
காவிப் பூவை யேவை யிகல்கவன நீலத் தால கால நிகர்வன காதிப் போக மோக மருள்வன ...... இருதோடார் காதிற் காதி மோதி யுழல்கண மாயத் தார்கள் தேக பரிசன காமக் ரோத லோப மதமிவை ...... சிதையாத பாவிக் காயு வாயு வலம்வர லாலிப் பார்கள் போத கருமவு பாயத் தான ஞான நெறிதனை ...... யினிமேலன் பாலெக் காக யோக ஜெபதப நேசித் தார வார பரிபுர பாதத் தாளு மாறு திருவுள ...... நினையாதோ கூவிக் கோழி வாழி யெனமயி லாலித் தால கால மெனவுயர் கூளிச் சேனை வான மிசைதனில் ...... விளையாடக் கோரத் தீர சூர னுடைவினை பாறச் சீற லேன பதிதனை கோலக் கால மாக அமர்செய்த ...... வடிவேலா ஆவிச் சேல்கள் பூக மடலிள பாளைத் தாறு கூறு படவுய ராலைச் சோலை மேலை வயலியி ...... லுறைவோனே ஆசைத் தோகை மார்க ளிசையுட னாடிப் பாடி நாடி வருதிரு ஆனைக் காவில் மேவி யருளிய ...... பெருமாளே. |
* ஏனபதி = ஆதிவராகம். இரணியாக்ஷன் என்பவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலின் கீழ் ஒளித்தான். பூமி தேவி முறையிட, திருமால் வராக ரூபம் எடுத்து, இரணியாக்ஷனைக் கொன்று பூமியை நிலை நிறுத்தினார். அரக்கன் ரத்தத்தைக் குடித்த வராகம் மதம் கொள்ள, சிவபெருமான் முருகனை அனுப்பினார். போரில் வராகத்தை முருகன் அடக்கி அதன் கொம்பைப் பிடுங்கிச் சிவனிடம் சேர்ப்பித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 361 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்டு, அன்பு, தனதன, தானத், என்னும், உயர்ந்து, செய்து, மேலை, பெருமாளே