பாடல் 357 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .........
தான தத்தன தத்தன தத்தன தான தத்தன தத்தன தத்தன தான தத்தன தத்தன தத்தன ...... தனதான |
ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச னாக மக்கலை கற்றச மர்த்திக ளார்ம னத்தையு மெத்திவ ளைப்பவர் ...... தெருவூடே ஆர வட்டமு லைக்குவி லைப்பண மாயி ரக்கல மொட்டிய ளப்பினு மாசை யப்பொரு ளொக்கந டிப்பவ ...... ருடன்மாலாய் மேலி ளைப்புமு சிப்பும வத்தையு மாயெ டுத்தகு லைப்பொடு பித்தமு மேல்கொ ளத்தலை யிட்டவி திப்படி ...... யதனாலே மேதி னிக்குள பத்தனெ னப்பல பாடு பட்டுபு ழுக்கொள்ம லக்குகை வீடு கட்டியி ருக்குமெ னக்குநி ...... னருள்தாராய் பீலி மிக்கம யிற்றுர கத்தினி லேறி முட்டவ ளைத்துவ குத்துடல் பீற லுற்றவு யுத்தக ளத்திடை ...... மடியாத பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை பேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர் பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு ...... குடனாட ஏலம் வைத்தபு யத்தில ணைத்தருள் வேலெ டுத்தச மர்த்தையு ரைப்பவர் ஏவ ருக்கும னத்தில்நி னைப்பவை ...... யருள்வோனே ஏழி சைத்தமி ழிற்பய னுற்றவெ ணாவ லுற்றடி யிற்பயி லுத்தம ஈசன் முக்கணி ருத்தன ளித்தருள் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 357 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, கொடுத்து, பெரிய, அந்த, கண்களை, பெருமாளே, கொண்ட, உடையவர்