பாடல் 356 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ....
தானதன தானத் தானதன தானத் தானதன தானத் ...... தனதான |
ஆரமணி வாரைப் பீறியற மேலிட் டாடவர்கள் வாடத் ...... துறவோரை ஆசைமட லூர்வித் தாளுமதி பாரப் பாளித படீரத் ...... தனமானார் காரளக நீழற் காதளவு மோடிக் காதுமபி ராமக் ...... கயல்போலக் காலனுடல் போடத் தேடிவரு நாளிற் காலைமற வாமற் ...... புகல்வேனோ பாரடைய வாழ்வித் தாரபதி பாசச் சாமளக லாபப் ...... பரியேறிப் பாய்மதக போலத் தானொடிக லாமுற் பாடிவரு மேழைச் ...... சிறியோனே சூரர்புர சூறைக் காரசுரர் காவற் காரஇள வேனற் ...... புனமேவுந் தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச் சோதிவளர் காவைப் ...... பெருமாளே. |
* மடல் ஏறுதல்: காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தலைவியிடம் உள்ள தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 356 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தானத், கொண்ட, குதிரை, அழகிய, வருகின்ற, செய்து, பெருமாளே, தோன்றி, மடல், உடைய