பாடல் 355 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் -
பூபாளம் ; தாளம் - சதுஸ்ர ஏகம் - திஸ்ரநடை - 6
எடுப்பு - அதீதம்
எடுப்பு - அதீதம்
தனத்த தான தானான தனத்த தான தானான தனத்த தான தானான ...... தனதான |
அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி யடைத்து வாயு வோடாத ...... வகைசாதித் தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச அசட்டு யோகி யாகாமல் ...... மலமாயை செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார சிரத்தை யாகி யான்வேறெ ...... னுடல்வேறு செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத சிவச்சொ ரூபமாயோகி ...... யெனஆள்வாய் தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால சுதற்கு நேச மாறாத ...... மருகோனே சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால தொடுத்த நீப வேல்வீர ...... வயலுரா மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி மகப்ர வாக பானீய ...... மலைமோதும் மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு மதித்த சாமி யேதேவர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 355 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்த, உள்ள, வேறு, தானான, யான், கூடிய, யோகி, பெருமாளே, உடல்