பாடல் 348 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ......
தனதான தந்த தனதான தந்த தனதான தந்த ...... தனதான |
மயலோது மந்த நிலையாலும் வஞ்ச வசைபேசு கின்ற ...... மொழியாலும் மறிபோலு கின்ற விழிசேரு மந்தி மதிநேரு கின்ற ...... நுதலாலும் அயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்ச நடையாலும் அங்கை ...... வளையாலும் அறிவேய ழிந்து அயர்வாகி நைந்து அடியேன்ம யங்கி ...... விடலாமோ மயிலேறி யன்று நொடிபோதி லண்டம் வலமாக வந்த ...... குமரேசா மறிதாவு செங்கை அரனா ரிடங்கொள் மலைமாது தந்த ...... முருகேசா நயவானு யர்ந்த மணிமாட மும்பர் நடுவேநி றைந்த ...... மதிசூழ நறைவீசு கும்ப குடமேவு கம்பை நகர்மீத மர்ந்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 348 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தனதான, கின்ற, அழகிய, ஒத்த, மீது, மான், உள்ள, கம்பை, நடையாலும், வந்த, கும்ப, பெருமாளே