பாடல் 345 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் -
சாரங்கா; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிடதகதிமி- 3 1/2
தகிடதகதிமி- 3 1/2
தனன தத்தன தனன தத்தன தனன தத்தன ...... தனதான |
படிறொ ழுக்கமு மடம னத்துள படிப ரித்துட ...... னொடிபேசும் பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள் பலகொ டுத்தற ...... உயிர்வாடா மிடியெ னப்பெரு வடவை சுட்டிட விதன முற்றிட ...... மிகவாழும் விரகு கெட்டரு நரகு விட்டிரு வினைய றப்பத ...... மருள்வாயே கொடியி டைக்குற வடிவி யைப்புணர் குமர கச்சியி ...... லமர்வோனே குரவு செச்சைவெண் முளரி புத்தலர் குவளை முற்றணி ...... திருமார்பா பொடிப டப்பட நெடிய விற்கொடு புரமெ ரித்தவர் ...... குருநாதா பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை பொருது ழக்கிய ...... பெருமாளே. |
* வடவாக்கினி என்பது பிரளய காலத்தில் உலகை எரித்தே அழிப்பதற்காக வட திசையிலிருந்து வரும் ஒரு நெருப்புக் கோளம் என்று சொல்வர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 345 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, அழகிய, பெருமாளே, உடைய