பாடல் 343 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - தர்பர்;
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிடதகதிமி-3 1/2
தகிடதகதிமி-3 1/2
தான தத்தனத் தான தத்தனத் தான தத்தனத் தான தத்தனத் தான தத்தனத் தான தத்தனத் ...... தனதான |
சீசி முப்புரக் காடு நீறெழச் சாடி நித்திரைக் கோசம் வேரறச் சீவன் முத்தியிற் கூட வேகளித் ...... தநுபூதி சேர அற்புதக் கோல மாமெனச் சூரி யப்புவிக் கேறி யாடுகச் சீலம் வைத்தருட் டேறி யேயிருக் ...... கறியாமற் பாசம் விட்டுவிட் டோடி போனதுப் போது மிப்படிக் காகி லேனினிப் பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் ...... தடியேனைப் பார டைக்கலக் கோல மாமெனத் தாப ரித்துநித் தார மீதெனப் பாத பத்மநற் போதை யேதரித் ...... தருள்வாயே தேசில் துட்டநிட் டூர கோதுடைச் சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித் தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த் ...... தருள்வோனே சீர்ப டைத்தழற் சூல மான்மழுப் பாணி வித்துருப் பாத னோர்புறச் சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் ...... குருநாதா காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக் கோவ லத்தியிற் கான நான்மறைக் காடு பொற்கிரிக் காழி யாருர்பொற் ...... புலிவேளூர் காள அத்தியப் பால்சி ராமலைத் தேச முற்றுமுப் பூசை மேவிநற் காம கச்சியிற் சால மேவுபொற் ...... பெருமாளே. |
* பஞ்ச கோசங்கள் (ஐந்து உறைகள்): அன்னமய கோசம் - உணவும் உடலும் கூடியது, பிராணமய கோசம் - வாக்கு, பாணி, பாதம், மற்றும் கர்மேந்திரியங்கள் இவற்றுடன் உயிரும் கூடியது, மனோமய கோசம் - மனம் மட்டும், விஞ்ஞானமய கோசம் - ஐம்பொறிகளும், புத்தியும் கூடியது, ஆனந்தமய கோசம் - ஆன்மாவுக்கு மிக அருகில் போலி ஆனந்தத்தைத் தருவது, எனப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 343 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தனத், கோசம், யான், அழகிய, கூடியது, நிலை, காடு, இருக்கும், பாணி, போதும், என்னை, பெருமாளே, காசி, சென்று, பஞ்ச