பாடல் 342 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .....
தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான |
கோவைச் சுத்தத் துப்பத ரத்துக் ...... கொடியார்தங் கோலக் கச்சுக் கட்டிய முத்தத் ...... தனமேவிப் பாவத் துக்குத் தக்கவை பற்றித் ...... திரியாதே பாடப் பத்திச் சித்த மெனக்குத் ...... தரவேணும் மாவைக் குத்திக் கைத்தற எற்றிப் ...... பொரும்வேலா மாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக் ...... கினியோனே சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப் ...... பதியோனே தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 342 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, நிறைந்த, போலவும், பெருமாளே, சேவற், தத்தத்