பாடல் 341 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ....
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா ...... தனதான |
கொத்தார் பற்கா லற்றே கப்பாழ் குப்பா யத்திற் ...... செயல்மாறிக் கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே கொட்டா விக்குப் ...... புறவாசித் தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன் அஆ உஉ...... எனவேகேள் செற்றே சுட்டே விட்டே றிப்போ மப்பே துத்துக் ...... கமறாதோ நித்தா வித்தா ரத்தோ கைக்கே நிற்பாய் கச்சிக் ...... குமரேசா நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர் நெட்டோ தத்திற் ...... பொருதோனே முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ முட்டா திட்டத் ...... தணிவோனே முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே. |
வரிசையாக நிறைந்திருந்த பல் வேரற்று விழுந்து போக, பாழ்பட்ட சட்டையான இந்த உடலின் செயல்கள் தடுமாறி, மயிரெல்லாம் கொக்கின் நிறமாக வெளுத்து, உடல் கூன் அடைந்து, ஊன்றுகோல் பிடித்து, கொட்டாவி விட்ட தலை குனிதலை அடைந்து, இவ்வாறு நிலை வேறுபாடுகளை அனுபவித்து, நின்றார், பின்னர் இறந்தார், ஐயோ கெட்டேன் எனக் கூறிக் கதறி, அ ஆ உ உ என்னும் ஒலியுடன் உறவினர் அழ, சுடுகாட்டுக்குச் சென்று, அங்கு பிணத்தைச் சுட்டுவிட்டு, (நீரில் மூழ்கி) வெளியேறி வருகின்ற அந்தப் பேதைமை வாய்ந்த துக்கம் நீங்காதோ? என்றும் உள்ளவனே, விரிந்த தோகையை உடைய மயில் மீது விளங்கி நிற்பவனே, காஞ்சீபுரத்துக் குமரேசனே, கொடுமை வாய்ந்த சூரன் கேடு அடைந்து கடலிடையே ஓட, போரினை பெரிய கடலில் புரிந்தவனே, முத்து மாலை அணிந்த தோளில் வெண்காந்தள் மலரைத் தவறாது விருப்பத்துடன் அணிபவனே, முதுமையே வாராதவனே, என்றும் இளமையாய் இருப்பவனே, என் தந்தையே, பரிசுத்தனே, பாசங்களினின்று நீங்கியவனே, முக்தியைத் தரும் பெருமாளே.
என்று தொடங்கும் பாடல்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 341 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தா, அடைந்து, வாய்ந்த, என்றும், பெருமாளே, முத்தா, கெட்டேன், நித்தா, ரத்தோ