பாடல் 336 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ......
தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத் ...... தனதான |
அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக் கணுரத்தைக் கனவெற்புத் ...... தனமேகம் அளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித் திளகிக்கற் புளநெக்குத் ...... தடுமாறித் துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத் தொடியர்க்கிப் படியெய்த்துச் ...... சுழலாதே சுருதிப்பொற் பொருள்செக்கர்க் குரவிட்டுத் தமர்பற்றித் தொழுசெச்சைக் கழல்பற்றிப் ...... பணிவேனோ புயலத்தைக் குயில்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப் புனமுத்தைப் புணர்சித்ரப் ...... புயவீரா புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப் புகல்பொற்குக் குடவெற்றிக் ...... கொடியோனே கயிலச்சுத் தரதத்துச் சயிலத்துத் தரநிற்கக் கரணிச்சித் தருள்கச்சிப் ...... பதியோனே கடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப் பொருசத்திக் கரசொக்கப் ...... பெருமாளே. |
* இந்திரனுக்கு மேகம் வாகனம். எனவே அது அவன் மகள் தேவயானைக்கும் வாகனம்.
** பார்வதியின் திருமணத்தின் போது இமய மலையில் கூடிய முனிவர் பெருங் கூட்டத்தால், வட திசை தாழ்ந்தது.சிவபெருமான் ஆணையின்படி அகத்தியர் தென் திசைக்குச் சென்று, பொதிய மலையை அடைந்து, பூமியை நிலை நிறுத்தினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 336 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத்தத், அழகிய, வலிமை, போய், அடைந்து, பூமியை, மலையில், திசை, வாகனம், உனது, பெருமாளே, நிலை, உள்ள, ஒழிந்து, மலர், மேகம்