பாடல் 335 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் -
பஹுதாரி; தாளம் - திஸ்ர ரூபகம் - 5
- எடுப்பு - /3 0
- எடுப்பு - /3 0
தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத் ...... தனதான |
பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப் பொய்த்தெத்துத் தத்துக் ...... குடில்பேணிப் பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப் பொற்சித்ரக் கச்சுக் ...... கிரியார்தோய் துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத் துக்கித்துக் கெய்த்துச் ...... சுழலாதே சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத் துச்சற்றர்ச் சிக்கப் ...... பெறுவேனோ திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச் செற்பத்ரக் கொக்கைப் ...... பொரும்வேலா செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச் செச்சைக்கொத் தொப்பித் ...... தணிவோனே கக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக் கட்கத்தத் தர்க்குப் ...... பெரியோனே கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக் கச்சிக்குட் சொக்கப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 335 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, தத்தத்தத், தத்தத், பெருமாளே, கற்றுப், பெறுவேனோ