பாடல் 325 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - ......;
தாளம் - .....
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான |
இறைச்சிப்பற் றிரத்தத்திட் டிசைக்கொக்கப் பரப்பப்பட் டெலுப்புக்கட் டளைச்சுற்றிச் ...... சுவர்கோலி எடுத்துச்செப் பெனக்கட்டிப் புதுக்குப்புத் தகத்திற்புக் கெனக்குச்சற் றுனக்குச்சற் ...... றெனுமாசைச் சிறைக்கொத்திப் பிறப்பிற்பட் டுறக்கச்சொப் பனத்துற்றுத் திகைக்கப்பட் டவத்தைப்பட் ...... டுழலாதுன் திருப்பத்மத் திறத்தைப்பற் றுகைக்குச்சித் திரத்தைச்சொற் றிதக்கொற்றப் புகழ்ச்செப்பித் ...... திரிவேனோ பிறைச்செக்கர்ப் புரைக்கொத்துச் சடைப்பச்சைக் கொடிக்கிச்சைப் பிறக்குற்றத் திருப்பக்கச் ...... சிவநாதர் பெருக்கப்புத் தடக்கைக்கற் பகத்தொப்பைக் கணத்துக்குப் பிரசித்தக் கொடிக்குக்டக் ...... கொடியோனே பறைக்கொட்டிக் களைச்சுற்றக் குறட்செக்கட் கணத்திற்குப் பலிக்குப்பச் சுடற்குத்திப் ...... பகிர்வேலா பணப்பத்திக் கணத்துத்திப் படுக்கைக்கச் சபத்திச்சைப் படுக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே. |
* பாற்கடலைக் கடைந்த போது திருமால் கச்சபமாக (ஆமையாக) முதுகு கொடுத்துத் தாங்கிப் பின்னர் இறுமாப்பு அடைந்து கடலைக் கலக்கினார். அந்த ஆமையை விநாயகர் அடக்கி மடிவிக்க, அதன் ஓட்டைச் சிவ பெருமான் அணிந்தார்.பின்னர் திருமால் குற்றம் தீர்ந்து காஞ்சியில் ஜோதிலிங்கத்தைப் பூஜித்து அந்நகரில் விளங்கினார் - காஞ்சிப் புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 325 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தத்தத், உடைய, கொண்ட, திருமால், அடைந்து, அழகிய, பின்னர், உனது, பெருமாளே, அந்த, வேண்டும்