பாடல் 324 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - கமாஸ்;
தாளம் - ஆதி - மிஸ்ரநடை - 28
நடை - தகிட தகதிமி
நடை - தகிட தகதிமி
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான |
எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப் பொருட்பொற்றட் டிடிக்கைக்குக் ...... குடில்மாயம் எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப் பிறக்கைக்குத் தலத்திற்புக் ...... கிடியாமுன் தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற் பெறச்செச்சைப் புயத்தொப்பித் ...... தணிவோனே செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித் திரட்டப்பிக் கழற்செப்பத் ...... திறல்தாராய் பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப் பணத்துட்கக் கடற்றுட்கப் ...... பொரும்வேலா பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப் பலிப்பப்பத் தருக்கொப்பித் ...... தருள்வாழ்வே கனிக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பக்ஷிக் கிடைப்புக்குக் களிப்புக்குத் ...... திரிவோனே கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக் கடற்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 324 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தத்தத், கொண்டு, அஞ்சிடவும், இன்றி, அழகிய, போவதற்கும், பெருமாளே, கொஞ்சம், உயிர்