பாடல் 317 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- .........
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான |
அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண் டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென் றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங் ...... கொருகோடி அலகைநின் றொத்தித் தித்திய றுத்தும் பலவியங் கொட்டச் சக்கடி கற்றந் தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும் ...... படிபாடிப் பரிமுகங் கக்கச் செக்கண்வி ழித்தும் பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும் படுகளம் புக்குத் தொக்குந டிக்கும் ...... படிமோதிப் படைபொருஞ் சத்திப் பத்மநி னைத்துஞ் சரவணன் கச்சிப் பொற்பனெ னப்பின் பரவியுஞ் சித்தத் துக்குவ ரத்தொண் ...... டடைவேனோ பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும் சிறியவஞ் சிக்கொத் தெய்த்தநு சுப்பும் ப்ரிதியொழிந் தொக்கக் கைக்கிளை துத்தங் ...... குரலாதி பிரிவில்கண் டிக்கப் பட்டவு ருட்டும் கமுகமுஞ் சிற்பச் சித்ரமு ருக்கும் பிரதியண் டத்தைப் பெற்றருள் சிற்றுந் ...... தியும்நீலக் கரியகொண் டற்கொப் பித்தக துப்புந் திலதமுஞ் செப்பொற் பட்டமு முத்தின் கனவடங் கட்டப் பட்டக ழுத்துந் ...... திருவான கருணையுஞ் சுத்தப் பச்சைவ னப்புங் கருதுமன் பர்க்குச் சித்திய ளிக்குங் கவுரியம் பைக்குப் புத்ரஎ வர்க்கும் ...... பெருமாளே. |
* தமிழின் ஏழிசைகள்:குரல் (ஷட்ஜம்), துத்தம் (ரிஷபம்), கைக்கிளை (காந்தாரம்), உழை (மத்திமம்), இளி (பஞ்சமம்), விளரி (தைவதம்), தாரம் (நிஷாதம்) என்பன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 317 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தம், தத்தன, கைக்கிளை, தத்தத், தனதனந், என்றும், பேற்றை, சிறிய, விருப்பம், சேர்ந்து, பெருமாளே, குச்சரி, சரவணன், தாளம், முத்தின், ஒன்று