பாடல் 300 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தானத்தன தானன தந்தன தானத்தன தானன தந்தன தானத்தன தானன தந்தன ...... தனதான |
வாருற்றெழு பூண்முலை வஞ்சியர் காருற்றெழு நீள்குழல் மஞ்சியர் வாலக்குயில் போல்மொழி கொஞ்சியர் ...... தெருமீதே மாணுற்றெதிர் மோகன விஞ்சையர் சேலுற்றெழு நேர்விழி விஞ்சியர் வாகக்குழை யாமப ரஞ்சியர் ...... மயலாலே சீருற்றெழு ஞானமு டன்கல்வி நேரற்றவர் மால்கொடு மங்கியெ சேருற்றறி வானத ழிந்துயி ...... ரிழவாமுன் சேவற்கொடி யோடுசி கண்டியின் மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கிய தேசுக்கதிர் கோடியெ னும்பத ...... மருள்வாயே போருற்றிடு சூரர்சி ரங்களை வீரத்தொடு பாரில ரிந்தெழு பூதக்கொடி சோரிய ருந்திட ...... விடும்வேலா பூகக்குலை யேவிழ மென்கயல் தாவக்குலை வாழைக ளுஞ்செறி போகச்செநெ லேயுதி ருஞ்செய்க ...... ளவைகோடி சாரற்கிரி தோறுமெ ழும்பொழில் தூரத்தொழு வார்வினை சிந்திடு தாதுற்றெழு கோபுர மண்டப ...... மவைசூழுந் தார்மெத்திய தோரண மென்தெரு தேர்சுற்றிய வார்பதி அண்டர்கள் தாமெச்சிய நீள்தணி யம்பதி ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 300 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானத்தன, எழுகின்ற, உடையவர்கள், தந்தன, தானன, எழுந்துள்ள, குலைகள், மீதுள்ள, பொன், பெருமாளே, ஆகிய