பாடல் 301 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் -
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் ...... தனதான |
வினைக்கின மாகுத் தனத்தினர் வேளம் பினுக்கெதி ராகும் ...... விழிமாதர் மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ் சமத்திடை போய்வந் ...... துயர்மூழ்கிக் கனத்தவி சாரம் பிறப்படி தோயுங் கருக்குழி தோறுங் ...... கவிழாதே கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங் கழற்புக ழோதுங் ...... கலைதாராய் புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ் சியைப்புணர் வாகம் ...... புயவேளே பொருப்பிரு கூறும் படக்கடல் தானும் பொருக்கெழ வானும் ...... புகைமூளச் சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந் திறக்கம ராடுந் ...... திறல்வேலா திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந் திருத்தணி மேவும் ...... பெருமாளே. |
* அருணகிரி நாதரின் இந்த வாக்கியம் பொய்யாகாதபடி, ஆண்டுதோறும் டிசம்பர் 31ம் தேதியில் அடியார்கள் திருத்தணிகையில் கூடித் திருப்புகழை ஓதுகின்றார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 301 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தன, தானம், அடியார்கள், திருத்தணிகையில், பெருமாளே, ழோதுங், கொடிய