பாடல் 29 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - காபி; தாளம்
- அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2
தகிட-1 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2
தனத்தந் தானன தானன தானன தனத்தந் தானன தானன தானன தனத்தந் தானன தானன தானன ...... தனதான |
அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு துவட்பஞ் சானத டாகம்வி டாமட அனத்தின் தூவிகு லாவிய சீறடி ...... மடமானார் அருக்கன் போலொளி வீசிய மாமர கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம் அழுத்தும் பாவியை யாவியி டேறிட ...... நெறிபாரா வினைச்சண் டாளனை வீணணை நீணிதி தனைக்கண் டானவ மானநிர் மூடனை விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி ...... பகராதே விகற்பங் கூறிடு மோகவி காரனை அறத்தின் பாலொழு காதமு தேவியை விளித்துன் பாதுகை நீதர நானருள் ...... பெறுவேனோ முனைச்சங் கோலிடு நீலம கோததி அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் ...... மருகோனே முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி திரைக்கங் காநதி தாதகி கூவிள முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு ...... முருகோனே தினைச்செங் கானக வேடுவ ரானவர் திகைத்தந் தோவென வேகணி யாகிய திறற்கந் தாவளி நாயகி காமுறும் ...... எழில்வேலா சிறக்குந் தாமரை யோடையில் மேடையில் நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய திருச்செந் தூர்வரு சேவக னேசுரர் ...... பெருமாளே. |
* அனிச்ச மலர் முகர்ந்தாலே வாடிவிடும் மென்மை வாய்ந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 29 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, கொண்ட, தனத்தந், தகதிமி, உயர்ந்த, வீசுகின்ற, என்னை, கண்டு, சங்குகள், ஒப்பற்ற, உடைய, பெரிய, மென்மை, பெறுவேனோ, மூடனை, வீசிய, முருகோனே, நாயகி, பெருமாளே, தாமரை, அழகிய