பாடல் 28 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - காம்போதி ;
தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதானா |
அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல அனலவிய மலமொழுக ...... அகலாதே அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ அழலினிகர் மறலியெனை ...... யழையாதே செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர் திருவடியி லணுகவர ...... மருள்வாயே சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி நிருதிநிதி பதிகரிய ...... வனமாலி நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி நிருதனுர மறஅயிலை ...... விடுவோனே மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு மகிழமடி மிசைவளரு ...... மிளையோனே மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின மறையவுயர் கரையிலுறை ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 28 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, என்னை, உயர்ந்த, யமன், கொடிய, பெருமாளே, போகவும்