பாடல் 27 - திருச்செந்தூர் - திருப்புகழ்

தனன தானன தந்தன
தந்தன
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன ...... தனதான
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன ...... தனதான
தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன ...... தனதான |
அளக பாரம லைந்துகு லைந்திட வதனம் வேர்வுது லங்கிந லங்கிட அவச மோகம்வி ளைந்துத ளைந்திட ...... அணைமீதே அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம அடர்ந காநுதி பங்கவி தஞ்செய்து அதர பானம ருந்திம ருங்கிற ...... முலைமேல்வீழ்ந் துளமும் வேறுப டும்படி ஒன்றிடு மகளிர் தோதக இன்பின்மு யங்குதல் ஒழியு மாறுதெ ளிந்துளம் அன்பொடு ...... சிவயோகத் துருகு ஞானப ரம்பர தந்திர அறிவி னோர்கரு தங்கொள்சி லம்பணி உபய சீதள பங்கய மென்கழல் ...... தருவாயே இளகி டாவளர் சந்தன குங்கும களப பூரண கொங்கைந லம்புனை இரதி வேள்பணி தந்தையும் அந்தண ...... மறையோனும் இனது றாதெதிர் இந்திரன் அண்டரும் ஹரஹ ராசிவ சங்கர சங்கர எனமி காவரு நஞ்சினை யுண்டவர் ...... அருள்பாலா வளர்நி சாசரர் தங்கள்சி ரம்பொடி படவி ரோதமி டுங்குல சம்ப்ரமன் மகர வாரிக டைந்தநெ டும்புயல் ...... மருகோனே வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும் இடைவி டாதுநெ ருங்கிய மங்கல மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே. |
கூந்தல் பாரம் அலைந்து குலைய, முகம் வியர்வை தோன்றி மாசு பெற, தன் வசமழியும்படி மோகம் உண்டாகிப் பிணிக்க, படுக்கையில், சிவந்த வாயினின்றும் சிரிப்பை வெளிப்படுத்தின களிப்புடன், நெருங்கிய நகங்களின் நுனி கொண்டு நகக் குறி பதியுமாறு செய்து, இதழ்களினின்றும் வரும் ஊறலை உண்டு, இடை அற்றுப் போகுமாறு மார்பின் மேல் வீழ்ந்து, உள்ளமும் மாறும்படி சேர்கின்ற விலைமாதர்களின் வஞ்சகம் நிறைந்த இன்பத்தில் முழுகுதல் ஒழியும் வண்ணம் மனம் தெளிந்து, உள்ளம் அன்புடன் சிவயோக நிலையில் உருகுகின்ற ஞானமும், மேலான ஆகம அறிவும் படைத்த ஞானிகள் தியானிக்கின்ற, அழகிய சிலம்பை அணிந்த, இரு குளிர்ந்த தாமரை போன்ற மென்மையான திருவடியைத் தந்து அருளுக. தளராது வளரும், சந்தனமும் குங்குமப் பூவின் கலவையும் நிறைந்த, மார்பின் அழகைக் கொண்ட ரதியின் கணவனான மன்மதன் தொழுகின்ற தந்தையாகிய திருமாலும், அந்தண பிரமனும் துன்புற, அங்கு இருந்த இந்திரனும் தேவர்களும் ஹர ஹரா சிவ சங்கரா சங்கரா என்று முறையிட, (பாற்கடலில்) பொங்கி எழுந்த (ஆலகால) விஷத்தை உண்டவராகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, வளர்ச்சியுற்ற அசுரர்களுடைய (கர்வம் கொண்ட) தலைகள் பொடிபடுமாறு பகைமை காட்டிய நற்சிறப்பு பெற்றவனும், சுறா மீன்கள் நிறைந்த கடலை (தான் ஒருவனாகக்) கடைந்தவனும், நெடிய மேகத்தின் நிறத்தைக் கொண்டவனுமான திருமாலின் மருமகனே, வளர்கின்ற வாழையும், மஞ்சளும் இஞ்சியும் எப்போதும் நெருங்கி விளங்குகின்ற மங்கலமும் மகிமையும் உள்ள சிறந்த நகரமாகிய திருச் செந்தூரில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 27 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, தானன, நிறைந்த, மார்பின், கொண்ட, சங்கரா, பெருமாளே, மஞ்சளும், தனதான, அந்தண, சங்கர, வளரும், இஞ்சியும்