பாடல் 259 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - கானடா;
தாளம் - அங்கதாளம் - 11 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான |
கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட ...... லொன்றினாலே கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு ...... திங்களாலே தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச ...... ரங்களாலே தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச ...... ழங்கலாமோ தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம ...... டந்தைகேள்வா திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் ...... கந்தவேளே பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய ...... மங்கைபாகா படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் ...... தம்பிரானே. |
ஒலித்து அதிர்கின்ற இந்தப் பொங்கும் கரிய கடல் ஒன்றினாலும், கோபித்து மிகச் சிவந்து போய் நெருப்பின் சூட்டினைப் பூண்டுகொண்டு உதித்த சந்திரனாலே, ஒப்பற்ற கரும்பு வில்லினை ஏந்தி மன்மதன் செலுத்திய மலர்ச் சரங்களாலே, வாட்டத்தால் தனித்த ஒருத்தியாம் இந்தத் தலைவி இளைப்புற்று இங்கு உடல் தளரலாமோ? தினைப் புனத்தில் உள்ள பயிரை முன்னாள் காவல் செய்த வள்ளியின் கணவனே, திருத்தணித் தலத்தின் மலை மீது விளங்குகின்ற கந்தக் கடவுளே, பனைமரம் போன்று பருத்த தும்பிக்கையை உடைய வெள்ளை யானைக்கு (ஐராவதம்) உரிய தேவர்கள் போற்றுகின்ற மங்கையாகிய தேவயானையின் பக்கத்தில் இருப்பவனே, ஆக்கி அளித்து அகற்றும் முத்தொழில்களையும் செய்யும் மும்மூர்த்திகளின் தலைவனான பெருமாளே.
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள் இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 259 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தகிட, தந்ததான, கடல், மன்மதன், தாத்தன, தந்த, தகதிமி, தனத்த, தத்தனத்