பாடல் 252 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தான தத்தன தத்தன தத்தன தான தத்தன தத்தன தத்தன தான தத்தன தத்தன தத்தன ...... தனதான |
ஓலை யிட்டகு ழைச்சிகள் சித்திர ரூப மொத்தநி றத்திகள் விற்கணை யோடி ணைத்தவி ழிச்சிகள் சர்க்கரை ...... யமுதோடே ஊறி யொத்தமொ ழிச்சிகள் புட்குர லோடு வைத்துமி ழற்றுமி டற்றிகள் ஓசை பெற்றது டிக்கொளி டைச்சிகள் ...... மணம்வீசும் மாலை யிட்டக ழுத்திகள் முத்தணி வார ழுத்துத னத்திகள் குத்திர மால்வி ளைத்தும னத்தைய ழித்திடு ...... மடமாதர் மார்ப சைத்தும ருட்டியி ருட்டறை வாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடு மாத ருக்குவ ருத்தமி ருப்பது ...... தணியாதோ வேலை வற்றிட நற்கணை தொட்டலை மீத டைத்துத னிப்படை விட்டுற வீற ரக்கன்மு டித்தலை பத்தையு ...... மலைபோலே மீத றுத்திநி லத்தில டித்துமெய் வேத லக்ஷ¤மி யைச்சிறை விட்டருள் வீர அச்சுத னுக்குந லற்புத ...... மருகோனே நீலி நிட்களி நிர்க்குணி நித்தில வாரி முத்துந கைக்கொடி சித்திர நீல ரத்தின மிக்கஅ றக்கிளி ...... புதல்வோனே நீற திட்டுநி னைப்பவர் புத்தியில் நேச மெத்தஅ ளித்தருள் சற்குரு நீல முற்றதி ருத்தணி வெற்புறை ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 252 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, உடையவர்கள், மாலை, சிறந்த, கொண்டவள், முத்து, நிறைந்த, அணிந்த, மயக்கத்தை, அழகிய, சித்திர, ழிச்சிகள், சர்க்கரை, ரத்தின, பெருமாளே