பாடல் 245 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - நளினகாந்தி;
தாளம் - ஆதி தேசாதி
தனனதன தான தனனதன தான தனனதன தான ...... தனதான |
உடையவர்க ளேவ ரெவர்களென நாடி யுளமகிழ ஆசு ...... கவிபாடி உமதுபுகழ் மேரு கிரியளவு மான தெனவுரமு மான ...... மொழிபேசி நடைபழகி மீள வறியவர்கள் நாளை நடவுமென வாடி ...... முகம்வேறாய் நலியுமுன மேயு னருணவொளி வீசு நளினஇரு பாத ...... மருள்வாயே விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர் விகிர் தர்பர யோகர் ...... நிலவோடே விளவு சிறு பூளை நகுதலையொ டாறு விடவரவு சூடு ...... மதிபாரச் சடையிறைவர் காண உமைமகிழ ஞான தளர் நடையி டாமுன் ...... வருவோனே தவமலரு நீல மலர்சுனைய நாதி தணிமலையு லாவு ...... பெருமாளே. |
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 245 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனதன, நடந்து, மிக்கது, மீது, பெருமாளே, வாடி, தளர், எவர்கள்