பாடல் 236 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனதனன தான தனதன தந்தன தனதனன தான தனதன தந்தன தனதனன தான தனதன தந்தன ...... தனதான |
விடமும்வடி வேலு மதனச ரங்களும் வடுவுநிக ரான மகரநெ டுங்குழை விரவியுடன் மீளும் விழிகளு மென்புழு ...... கதுதோயும் ம்ருகமதப டீர பரிமள குங்கும மணியுமிள நீரும் வடகுல குன்றமும் வெருவுவன பார புளகத னங்களும் ...... வெகுகாம நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிட மலர்சொருகு கேச பரமுமி லங்கிய நளினமலர் சோதி மதிமுக விம்பமும் ...... அனநேராம் நடையுநளிர் மாதர் நிலவுதொ ழுந்தனு முழுதுமபி ராம அரிவய கிண்கிணெ னகையுமுள மாதர் கலவியி னைந்துரு ...... கிடலாமோ வடிவுடைய மானு மிகல்கர னுந்திக ழெழுவகைம ராம ரமுநிக ரொன்றுமில் வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட ...... லவையேழும் மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன் வகையிரவி போலு மணியும லங்க்ருத மணிமவுலி யான வொருபதும் விஞ்சிரு ...... பதுதோளும் அடைவலமு மாள விடுசர அம்புடை தசரதகு மார ரகுகுல புங்கவன் அருள்புனைமு ராரி மருகவி ளங்கிய ...... மயிலேறி அடையலர்கள் மாள வொருநிமி டந்தனி லுலகைவல மாக நொடியினில் வந்துயர் அழகியசு வாமி மலையில மர்ந்தருள் ...... பெருமாளே. |
நஞ்சும் கூரிய வேலும் மன்மதனுடைய பாணங்களும் மாவடுவையும் ஒத்தனவாய், மகர மீன் போன்ற நீண்ட குண்டலங்களுடன் கலந்து, உடனே மீளும் கண்களும், மென்மை வாய்ந்த புனுகு சட்டம் கலந்த கஸ்தூரி, சந்தனம், மணமுள்ள செஞ்சாந்து அணிந்துள்ள, இள நீர் போன்றனவும், வடக்கே உள்ள சிறந்த மேரு மலை போன்றனவும், அச்சம் தரத் தக்கனவும், பாரமுள்ளனவும், புளகம் பூண்டுள்ளனவும் ஆகிய மார்பகங்களும், மிக்க காமத்தை எழுப்பும் நடனம் செய்கின்ற பாதங்களில் அணிந்துள்ள சிலம்பும், மேகமும் (இதன் கரு நிறத்துக்கு எந்த மூலை என்று) கெஞ்சும்படி கறுத்தும் மலர் சொருகப்பட்ட கூந்தல் பாரமும், விளங்கும் தாமரை மலர் போன்று நிலவொளி வீசும் முகச் சோதியும், அன்னப் பறவைக்கு ஒப்பான நடை அழகும், குளிர்ந்த அழகிய சந்திரனும் தொழுகின்ற உடல் முழுமையும் உள்ள அழகும், சிலம்பின் உட்பரலின் மணிகள் கிண் கிண் என ஒலிக்கும் சிரிப்பும் கொண்ட விலைமாதர்களுடைய சேர்க்கையில் நான் உள்ளம் வாடி உருகுதல் நன்றோ? அழகுடைய (மா¡£சன் என்னும்) பொன்மானும், பகைத்து வந்த கரன் என்னும் அரக்கனும், விளங்கிய ஏழு வகையான மரா மரங்களும், ஒப்பு ஒன்றுமே இல்லாத வலிமை வாய்ந்த வாலி என்னும் குரங்கு அரசனின் மார்பும், பெரிய ஏழு கடல்களும், வீரமுள்ள அசுரர்களின படைகள் முழுதும், இலங்கை அரசன் ராவணனுடைய சிறப்புற்ற சூரியன் போல் ஒளி வீசி அணிந்த அலங்காரமான ரத்ன கி¡£டம் விளங்கும் தலைகள் பத்தும், மேம்பட்டு விளங்கும் இருபது தோள்களும், அடைந்திருந்த வலிமையையும் (இவை எல்லாம்) மாண்டு ஒடுங்க, ஏவிய போர் அம்பைக் கொண்ட தசரத மன்னனுடைய மகனும் ரகு குலத்தைச் சேர்ந்த மேலானவனும், அருள் பாலிக்கும் (ராமனுமாகிய) திருமாலின் மருகனே, விளங்குகின்ற மயிலில் மீது ஏறி ஒரு நிமிட நேரத்தில் பகைவர்கள் இறக்கும்படி, உலகை வலமாக நொடிப் பொழுதில் வந்து, சிறந்த அழகிய சுவாமி மலையில் அமர்ந்து அருளிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 236 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - விளங்கும், தனதனன, என்னும், தனதன, தந்தன, மலர், அழகும், கிண், கொண்ட, சிறந்த, அழகிய, போன்றனவும், மாதர், மீளும், வாலி, பெருமாளே, அணிந்துள்ள, வாய்ந்த, உள்ள