பாடல் 235 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த ...... தனதான |
வார்குழல் விரித்துத் தூக்கி வேல்விழி சுழற்றிப் பார்த்து வாவென நகைத்துத் தோட்டு ...... குழையாட வாசக முரைத்துச் சூத்ர பாவையெ னுறுப்பைக் காட்டி வாசனை முலைக்கச் சாட்டி ...... யழகாகச் சீர்கலை நெகிழ்த்துப் போர்த்து நூலிடை நெளித்துக் காட்டி தீதெய நடித்துப் பாட்டு ...... குயில்போலச் சேருற அழைத்துப் பார்த்து சார்வுற மருத்திட் டாட்டி சீர்பொருள் பறிப்பொய்க் கூத்த ...... ருறவாமோ சூரர்கள் பதைக்கத் தேர்க்க ளானைக ளழித்துத் தாக்கி சூர்கிரி கொளுத்திக் கூற்று ...... ரிடும்வேலா தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட வுதைத்துக் கோத்த தோலுடை யெனப்பர்க் கேற்றி ...... திரிவோனே ஏரணி சடைச்சிப் பாற்சொ லாரணி சிறக்கப் போற்று மேரெழி னிறத்துக் கூர்த்த ...... மகவோனே ஏடணி குழைச்சித் தூர்த்த வாடகி குறத்திக் கேற்ற ஏரக பொருப்பிற் பூத்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 235 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போல், தானன, தாத்த, தனத்தத், காட்டியும், அழகிய, பெருமாளே, சீரான, காட்டி, தூக்கி, சுழற்றிப், பார்த்து, நெளித்துக், தாக்கி