பாடல் 210 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனதனன தந்த தான தனதனன தந்த தான தனதனன தந்த தான ...... தனதான |
கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது கடலளவு கண்டு மாய ...... மருளாலே கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள் கவினறந டந்து தேயும் ...... வகையேபோய் இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு மிடமிடமி தென்று சோர்வு ...... படையாதே இசையொடுபு கழந்த போது நழுவியப்ர சண்டர் வாச லிரவுபகல் சென்று வாடி ...... யுழல்வேனோ மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக மலர்வளநி றைந்த பாளை ...... மலரூடே வகைவகையெ ழுந்த சாம வதிமறைவி யந்து பாட மதிநிழலி டுஞ்சு வாமி ...... மலைவாழ்வே அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப அணிமயில்வி ரும்பி யேறு ...... மிளையோனே அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்ட பாவை அருள்புதல்வ அண்ட ராஜர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 210 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சென்று, தந்த, எல்லை, கண்டும், உடைய, கண்டு, தனதனன, போய்க், எண்ணி, இடம், என்னும், பெருமாளே, தென்று, போது, பாளை, அளவைப்