பாடல் 210 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனதனன தந்த தான தனதனன தந்த தான தனதனன தந்த தான ...... தனதான |
கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது கடலளவு கண்டு மாய ...... மருளாலே கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள் கவினறந டந்து தேயும் ...... வகையேபோய் இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு மிடமிடமி தென்று சோர்வு ...... படையாதே இசையொடுபு கழந்த போது நழுவியப்ர சண்டர் வாச லிரவுபகல் சென்று வாடி ...... யுழல்வேனோ மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக மலர்வளநி றைந்த பாளை ...... மலரூடே வகைவகையெ ழுந்த சாம வதிமறைவி யந்து பாட மதிநிழலி டுஞ்சு வாமி ...... மலைவாழ்வே அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப அணிமயில்வி ரும்பி யேறு ...... மிளையோனே அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்ட பாவை அருள்புதல்வ அண்ட ராஜர் ...... பெருமாளே. |
சூரியன் உதித்துச் செல்லும் எல்லை அளவைச் சென்று கண்டும், மோதும் அலைகளை உடைய கடலின் எல்லை அளவைப் போய்க் கண்டும், உலக மாயை என்னும் மயக்கத்தால், கூட்டமான படங்களை உடைய பாம்பு அரசனாகிய ஆதி சேஷனின் எல்லை அளவைப் போய்க் கண்டும், கால்கள் எங்கெங்கும் அலைந்து என் அழகு குலைய நடந்து தேயுமாறு அங்கங்கே சென்று, இது நல்ல இடம் என்று எண்ணி லோபிகளுடைய சமீபத்தில் அணுகிச் சேர்ந்து, இதுதான் சரியான இடம் என்று எண்ணி மனத் தளர்ச்சி கொள்ளாமல், இசைப் பாட்டுக்களாலும் உரையாலும் புகழ்ந்து நின்ற போது, அந்த இடத்தை விட்டு வெளியே நழுவும் பெரிய பிரமுகர்களின் வீட்டு வாசலில் இரவும் பகலும் சென்று நான் வாடித் திரியலாமோ? வண்டுகள் நிறைந்து வாசனை வீசும் தேனை உண்டு, கமுக மரத்தில் பூவின் வளப்பம் உள்ள பாளை மலர்களின் இடையே இனம் இனமாக எழுந்து சாமம் என்னும் சிறந்த வேதத்தை வியக்கத்தக்க முறையில் பாட, சந்திரனின் தண்மையைத் தரும் சுவாமிமலையாகிய திருவேரகத்தில் வாழும் செல்வமே, உலகம் எல்லாம் திர்ச்சி கொள்ள வீசுகின்ற பெருங்காற்று என்று சொல்லும்படியாக வருகின்ற, நீல நிறங்கொண்ட தோகையை உடைய, அழகான மயிலில் விரும்பி ஏறும் இளையவனே, முறையாக எல்லா உலகங்களையும் படைத்து, அவற்றை நிலைத்திருக்கச் செய்த பார்வதி தேவி அருளிய மகனே, தேவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 210 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சென்று, தந்த, எல்லை, கண்டும், உடைய, கண்டு, தனதனன, போய்க், எண்ணி, இடம், என்னும், பெருமாளே, தென்று, போது, பாளை, அளவைப்