பாடல் 211 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - யமுனா
கல்யாணி; தாளம் - அங்கதாளம்
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதனன தந்த தானனத் தனதனன தந்த தானனத் தனதனன தந்த தானனத் தனதான |
கறைபடுமு டம்பி ராதெனக் கருதுதலொ ழிந்து வாயுவைக் கருமவச னங்க ளால்மறித் ...... தனலூதிக் கவலைபடு கின்ற யோககற் பனைமருவு சிந்தை போய்விடக் கலகமிடு மஞ்சும் வேரறச் ...... செயல்மாளக் குறைவறநி றைந்த மோனநிர்க் குணமதுபொ ருந்தி வீடுறக் குருமலைவி ளங்கு ஞானசற் ...... குருநாதா குமரசர ணென்று கூதளப் புதுமலர்சொ ரிந்து கோமளப் பதயுகள புண்ட ¡£கமுற் ...... றுணர்வேனோ சிறைதளைவி ளங்கு பேர்முடிப் புயலுடன டங்க வேபிழைத் திமையவர்கள் தங்க ளூர்புகச் ...... சமராடித் திமிரமிகு சிந்து வாய்விடச் சிகரிகளும் வெந்து நீறெழத் திகிரிகொள நந்த சூடிகைத் ...... திருமாலும் பிறைமவுலி மைந்த கோவெனப் பிரமனைமு னிந்து காவலிட் டொருநொடியில் மண்டு சூரனைப் ...... பொருதேறிப் பெருகுமத கும்ப லாளிதக் கரியெனப்ர சண்ட வாரணப் பிடிதனைம ணந்த சேவகப் ...... பெருமாளே. |
* தொழில் மந்திரங்கள் ஆகர்ஷண, ஸ்தம்பநாதி மந்திரங்கள் ஆகும். இவற்றை கர்மயோகிகள் மேற்கொள்வர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 211 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தானனத், தந்த, நிலையை, தேவர்கள், மந்திரங்கள், போகவும், கொண்ட, பெருமாளே, ளங்கு, வெந்து, திருமாலும், நிலைத்து