பாடல் 205 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - அடாணா; தாளம்
- அங்கதாளம் - 5 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தந்தத் தனதன தனதன தனதன தந்தத் தனதன தனதன தனதன தந்தத் தனதன தனதன தனதன ...... தனதான |
எந்தத் திகையினு மலையினு முவரியி னெந்தப் படியினு முகடினு முளபல எந்தச் சடலமு முயிரியை பிறவியி ...... னுழலாதே இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு என்சித் தமுமன முருகிநல் சுருதியின் ...... முறையோடே சந்தித் தரஹர சிவசிவ சரணென கும்பிட் டிணையடி யவையென தலைமிசை தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் ...... குதிபாயச் சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு னந்தத் திருநட மிடுசர ணழகுற சந்தச் சபைதனி லெனதுள முருகவும் ...... வருவாயே தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம துங்கத் திசைமலை யுவரியு மறுகச ...... லரிபேரி துன்றச் சிலைமணி கலகல கலினென சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு ...... மயில்வேலா கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத கந்தப் பரிமள தனகிரி யுமையரு ...... ளிளையோனே கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள் அம்பொற் கொடியிடை புணரரி மருகநல் கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 205 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தந்தத், குலமகள், திருமகள், குருமலை, மலைமகள், பெருமாளே, கந்தப், உயிர், மலர், அழகிய, தாமரை, கலினென, நான், டமடம, கொடியிடை, தலைமிசை, சிவசிவ, எந்தத், தொந்தத், திகுகுட, தகதிமி, டுடுடுடு, டிமிடிமி, தகுகுட, கலகல