பாடல் 205 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - அடாணா; தாளம்
- அங்கதாளம் - 5 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனந்த தான தனதன தனந்த தான தனதன தனந்த தான ...... தனதான |
இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி னிருவினை யிடைந்து போக ...... மலமூட விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத மிலையென இரண்டு பேரு ...... மழகான பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர் பணியவிண் மடந்தை பாத ...... மலர்தூவப் பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட பருமயி லுடன்கு லாவி ...... வரவேணும் அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம் அடியென விளங்கி யாடு ...... நடராஜன் அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம் அயலணி சிவன்பு ராரி ...... யருள்சேயே மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி மறலியுண வென்ற வேலை ...... யுடையோனே வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி மலைமிசை விளங்கு தேவர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 205 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தனந்த, நடுங்க, வேலை, பெருமாளே, புகழ்ந்து, தேவர், விளங்கி, கலந்து, தகதிமி, முநிவர்கள்