பாடல் 187 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தத்தத்தத் தத்தத் தத்தன தத்தத்தத் தத்தத் தத்தன தத்தத்தத் தத்தத் தத்தன ...... தனதான |
முத்துக்குச் சிட்டுக் குப்பிமு டித்துச்சுக் கைப்பிற் சுற்றியு முற்பக்கத் திற்பொற் புற்றிட ...... நுதல்மீதே முக்யப்பச் சைப்பொட் டிட்டணி ரத்நச்சுட் டிப்பொற் பட்டிவை முச்சட்டைச் சித்ரக் கட்டழ ...... கெழிலாடத் தித்திக்கச் சொற்சொற் றுப்பிதழ் நச்சுக்கட் கற்புச் சொக்கியர் செப்புக்கொக் கக்கச் சுப்பெறு ...... தனமேருத் திட்டத்தைப் பற்றிப் பற்பல லச்சைக்குட் பட்டுத் தொட்டுயிர் சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படி ...... யுழல்வேனோ மெத்தத்துக் கத்தைத் தித்தியி னிச்சித்தத் திற்பத் தத்தொடு மெச்சிச்சொர்க் கத்திற் சிற்பர ...... மருள்வாயே வித்தைக்குக் கர்த்ருத் தற்பர முக்கட்சித் தர்க்குப் புத்திர விச்சித்ரச் செச்சைக் கத்திகை ...... புனைவோனே நித்யக்கற் பத்திற் சித்தர்க ளெட்டுத்திக் குக்குட் பட்டவர் நிஷ்டைக்கற் புற்றப் பத்தர்கள் ...... அமரோரும் நெட்டுக்குப் புட்பத் தைக்கொடு முற்றத்துற் றர்ச்சிக் கப்பழ நிக்குட்பட் டத்துக் குற்றுறை ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 187 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தத்தத், கொண்டு, தத்தன, தத்தத், வந்து, பெருமாளே, அணிந்து