பாடல் 167 - பழநி - திருப்புகழ்

ராகம் - பந்துவராளி; தாளம்
- கண்டசாபு - 2 1/2
தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான |
திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் ...... புதமான செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் ...... கமுமீதே இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் ...... றமிழ்பாட இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் ...... பெறவேணும் கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் ...... பொரும்வேலா கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் ...... கிறகோடே படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் ...... கொருபாலா பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 167 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - யான், தனதனனத், இல்லாதவன், செய்யாதவன், ஏதும், நல்ல, தனதான, பெருமாளே