பாடல் 166 - பழநி - திருப்புகழ்

ராகம் - செஞ்சுருட்டி ;
தாளம் - சதுஸ்ர த்ருவம்
எடுப்பு /4/4/40, கண்டநடை - 35
எடுப்பு /4/4/40, கண்டநடை - 35
தனதன தந்தான தானான தானதன தனதன தந்தான தானான தானதன தனதன தந்தான தானான தானதன ...... தனதான |
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ...... யணுகாதே தலமிசை யதற்கான பேரோடு கூறியிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் சரியும்வ யதுக்கேது தா¡£ர்சொ லீரெனவும் ...... விதியாதே உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ...... ளிருபாதம் உளமது தரித்தேவி னாவோடு பாடியருள் வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை ...... வரவேணும் அலைகட லடைத்தேம காகோர ராவணனை மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ...... மருகோனே அறுகினை முடித்தோனை யாதார மானவனை மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் ...... வருவோனே பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய் பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளா பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில் வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர் பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 166 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வரும், தானதன, தானான, தனதன, தந்தான, சிறந்த, உடைய, சிலர், மீது, பெருமாளே, தலைவலி, காவேரி, நோய்கள்