பாடல் 161 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான |
சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து சுரதக்ரியை யால்வி ளங்கு ...... மதனூலே சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்கு தொழிலுடைய யானு மிங்கு ...... னடியார்போல் அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்து அறிவையறி வால றிந்து ...... நிறைவாகி அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப அமுதையொழி யாத ருந்த ...... அருள்வாயே பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து பரிதகழை யாமுன் வந்து ...... பரிவாலே பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற படைஞரொடி ராவ ணன்ற ...... னுறவோடே எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட ரகுபதியி ராம சந்த்ரன் ...... மருகோனே இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்த இமையவள்த னால்ம கிழ்ந்த ...... பெருமாளே. |
சுருண்டுள்ள கூந்தல் கொண்டையையும், பெருத்த மார்பகங்களையும் உடைய விலைமாதர்களின் வசமாக மனம் ஈடுபட்டு, காம லீலைகளை எல்லாம் விளக்கும் மன்மத சாத்திரத்தையே வேதம் என்று எண்ணி, அறிவில்லாதவருடன் நட்புக் கொள்ளும் செய்கைகளை உடைய நானும், இங்கு உன்னுடைய அடியார்களைப் போல் அருமையான வேதங்களையே உண்மையான நூலாகக் கருதி, மநு தர்ம சாஸ்திர வழியிலே நடந்து, அறிவு இன்னது என்பதை உள் அறிவுகொண்டு அறிந்து, பூரண ஞானம் பெற்று, எல்லா உலகங்களிலும் உள்ள தலங்கள் யாவையும் சுத்த ஞான வெளியாகவே கண்டு, மெய்ஞ்ஞான இன்ப அமுதத்தை ஓய்வின்றிப் பருக அருள் செய்வாயாக. சூரியனுடைய மகனான சுக்¡£வனின் அரண்மனை வாயில் மந்திரியாகிய அனுமானுடைய உதவியுடன் நேராகப் பணிந்து (ஸ்ரீராமர்) தன்னை அன்புடனும் தகைவுடனும் அழைப்பதற்கு முன்னமேயே தானே பணிவுடன் சென்று, பக்தியுடன் சரணாகதி அடைந்த விபீஷணன் பொன் மகுடம் முடியில் சூட்டப்பட்டு நிற்க, இராவணன் தன் உறவினர்களுடனும் படைகளுடனும் இறந்து நெருப்பிற்கு இரையாகி மடிய, பக்தி மாறுதல் சிறிதும் இல்லாத தேவர்கள் இந்திர லோகத்தில் குடி புகுந்து மீண்டும் வாழவும், இராவணனிடம் பகை கொண்ட, ரகு குலத்தில் வந்த தலைவனான இராமச் சந்திர மூர்த்தியின் மருகனே, இளைய குறப் பெண்ணாகிய வள்ளியின் பங்கனே, பழநிமலை நாதனே, கந்தனே, இமவான் மகளான பார்வதி மகிழ்கின்ற பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 161 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தந்த, பெருமாளே, உடைய, பழநிமலை, இன்ப, னைந்து, கொண்ட