பாடல் 157 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தனனதன தத்தத் தனத்ததன தனதனன தனனதன தத்தத் தனத்ததன தனதனன தனனதன தத்தத் தனத்ததன ...... தனதான |
சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையு மொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடி சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி ...... யணுகாதே சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடு சுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல் திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை ...... யொழியாதே மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடி உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம் வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது ...... மொருநாளே வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபத ...... மருள்வாயே நறையிதழி யறுகுபல புட்பத் திரட்களொடு சிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையி னளினமுற அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவு ...... மயிலேறி நவநதிகள் குமுகுமென வெற்புத் திரட்சுழல அகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும் நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவரு ...... முருகோனே குறவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில் மலையிலெழு தினையிதணில் வைத்துச் சிறுக்கியிரு குவிமுலையு மணியிடையு மெச்சிப் புணர்ச்சிசெயு ...... மணவாளா குறுமுநிவ னிருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினிய குருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழு ...... பெருமாளே. |
* ஒன்பது நதிகள்: கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, கோதாவரி, காவேரி, சோணை, துங்கபத்திரை.
** ஒன்பது மணிகள்: வைரம், வைடூர்யம், முத்து, பவளம், நீலம், மரகதம், கோமேதகம், புஷ்பராகம், மாணிக்கம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 157 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, மணிகள், ஒன்பது, தனத்ததன, தனனதன, தத்தத், விளங்க, வரும், கங்கை, உள்ள, மீது, அழகிய, இனிய, முக்தி, திடுக்கிடவும், வெற்புத், மெச்சிப், பெருமாளே, சிறிய, சொல்லிய, உடலை, மொகு, மனம்