பாடல் 156 - பழநி - திருப்புகழ்

ராகம் - ஜோன்புரி /
சங்கராபரணம்; தாளம் - கண்டசாபு - 2 1/2
தக-1, தகிட-1 1/2 - எடுப்பு 1/2 தள்ளி
தக-1, தகிட-1 1/2 - எடுப்பு 1/2 தள்ளி
தனனா தனந்ததன தனனா தனந்ததன தனனா தனந்ததன ...... தனதான |
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல் அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு மடியேனை அஞ்சலென ...... வரவேணும் அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய அருள்ஞான இன்பமது ...... புரிவாயே நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத நலமான விஞ்சைகரு ...... விளைகோவே தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே. |
சிவபிரானது மனம் குளிரும்படியாக ஓம் என்ற மந்திரத்தின் விளக்க உபதேசத்தை அவரது இரு செவிகளிலும் சொன்ன குருநாதனே, சிவகாம சுந்தரியாம் பார்வதியின் மேன்மையான மைந்தனே, கந்தனே, உனக்குச் செய்யும் தொண்டினையே விரும்பி உள்ளத்தில் நினைக்காமல், கேடு விளைவிக்கும் மாயையின் வசமாகி, உலகிலே வீணாக அலைந்து திரியும் அடியேனை அஞ்சாதே எனக் கூறி அருள்வதற்கு நீ வரவேண்டும். அறிவு மனத்திலே பெருகி வளரவும், துன்பங்களெல்லாம் தொலையவும், நின்னருளால் பெறக் கூடிய ஞான இன்பத்தை தந்தருள்வாயாக. வெண்ணெயையும் திருடி, உரலுடனும் கட்டுப்பட்ட ஹரி, ரகுராமனாம் திருமால் மனமகிழும் மருமகனே, நவகண்ட பூமியில் யாவரும் கைதொழுது வணங்கும் உண்மைத் தெய்வமே, அலங்காரமானவனே, நலம் தரும் மாயவித்தையால் பிறப்புத் தோற்றங்கள் பலவற்றை விளைவிக்கும் தலைவனே, தேவயானை, அழகிய குறப்பெண் வள்ளி இவ்விருவருக்கும் மணவாளனே, நிறைவான திறல் வாய்ந்த வீரனே, மிக்க ஒளி வீசும் கூரிய வேலாயுதனே, திருவாவினன்குடியில் எழுந்தருளிய மன்மதனே, அழகனே, உலகில் உண்மைப் பொருளைக் கண்டு தெரிவித்த திறம் வாய்ந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 156 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனா, தனந்ததன, வாய்ந்த, விளைவிக்கும், சிவகாம, பெருமாளே