பாடல் 155 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்தன தானன தத்தத் தந்தன தந்தன தானன தத்தத் தந்தன தந்தன தானன தத்தத் தந்தன ...... தனதான |
சிந்துர கூரம ருப்புச் செஞ்சரி செங்கைகு லாவந டித்துத் தென்புற செண்பக மாலைமு டித்துப் பண்புள ...... தெருவூடே சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கய லம்புகள் போலவி ழித்துச் சிங்கியில் செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி ...... விலைமாதர் வந்தவ ராரென ழைத்துக் கொங்கையை யன்புற மூடிநெ கிழ்த்திக் கண்பட மஞ்சணி ராடிமி னுக்கிப் பஞ்சணை ...... தனிலேறி மந்திர மோகமெ ழுப்பிக் கெஞ்சிட முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள் மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத ...... மருள்வாயே இந்திர நீலவ னத்திற் செம்புவி யண்டக டாகம ளித்திட் டண்டர்க ளெண்படு சூரைய ழித்துக் கொண்டரு ...... ளொருபேடி இன்கன தேரைந டத்திச் செங்குரு மண்டல நாடும ளித்துப் பஞ்சவ ரின்புறு தோழ்மையு டைக்கத் தன்திரு ...... மருகோனே சந்திர சூரியர் திக்கெட் டும்புக ழந்தமில் வாழ்வது பெற்றுத் தங்கிய சங்கர னார்செவி புக்கப் பண்பருள் ...... குருநாதா சம்ப்ரம மானகு றத்திக் கின்புறு கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய ...... பெருமாளே. |
* பாண்டவரின் வனவாசத்தின் கடைசி ஆண்டில் அர்ச்சுனன் ஒரு பேடி உருவில் அஞ்ஞாதவாசம் புரிந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 155 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, அழகிய, தந்து, தத்தத், தானன, செவ்விய, இருந்த, குரு, ஆசையை, பெருமாளே, லக்கிப், பஞ்சணை, மந்திர, மண்டல, சிவந்த