பாடல் 149 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான |
குறித்தமணிப் பணித்துகிலைத் திருத்தியுடுத் திருட்குழலைக் குலைத்துமுடித் திலைச்சுருளைப் ...... பிளவோடே குதட்டியதுப் புதட்டைமடித் தயிற்பயிலிட் டழைத்துமருட் கொடுத்துணர்வைக் கெடுத்துநகக் ...... குறியாலே பொறித்ததனத் தணைத்துமனச் செருக்கினர்கைப் பொருட்கவரப் புணர்ச்சிதனிற் பிணிப்படுவித் ...... திடுமாதர் புலத்தலையிற் செலுத்துமனப் ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப் புரித்தருளித் திருக்கழலைத் ...... தருவாயே பறித்ததலைத் திருட்டமணக் குருக்களசட் டுருக்களிடைப் பழுக்களுகக் கழுக்கள்புகத் ...... திருநீறு பரப்பியதத் திருப்பதிபுக் கனற்புனலிற் கனத்தசொலைப் பதித்தெழுதிப் புகட்டதிறற் ...... கவிராசா செறித்தசடைச் சசித்தரியத் தகப்பன்மதித் துகப்பனெனச் சிறக்கவெழுத் தருட்கருணைப் ...... பெருவாழ்வே திகழ்ப்படுசெய்ப் பதிக்குளெனைத் தடுத்தடிமைப் படுத்தஅருட் டிருப்பழநிக் கிரிக்குமரப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 149 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்ததனத், அழகிய, பெருமாளே