பாடல் 1297 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
கானடா
தாளம் - சதுஸ்ர ஜம்பை - 7
தாளம் - சதுஸ்ர ஜம்பை - 7
தத்தத் தனான ...... தனதான |
பட்டுப் படாத ...... மதனாலும் பக்கத்து மாதர் ...... வசையாலும் சுட்டுச் சுடாத ...... நிலவாலும் துக்கத்தி லாழ்வ ...... தியல்போதான் தட்டுப் படாத ...... திறல்வீரா தர்க்கித்த சூரர் ...... குலகாலா மட்டுப் படாத ...... மயிலோனே மற்றொப்பி லாத ...... பெருமாளே. |
என்னை மலர்ப் பாணங்களினால் தாக்கியும் தாக்காததுபோல மறைந்திருக்கும் மன்மதனாலும், அண்டை அயலிலுள்ள பெண்களின் பழிச்சொற்களினாலும், தன் கிரணங்களினால் எரித்தும் எரிக்காதது போல விளங்கும் நிலவினாலும், நான் விரக வேதனையில் மூழ்கித் தவிப்பது தகுதியாகுமா? குறையொன்றும் இல்லாத பராக்கிரமம் உடைய வீரனே, உன்னுடன் வாதிட்டு எதிர்த்த சூரனின் குலத்துக்கே யமனாக வந்து வாய்ந்தவனே, அடக்க முடியாத வீரம் செறிந்த மயிலை வாகனமாகக் கொண்டோனே, வேறு யாரையும் உனக்கு ஒப்பாகச் சொல்லமுடியாத பெருமாளே.
இது அகத்துறையில் முருகனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் வைத்து எழுதிய பாட்டு.மன்மதன், மலர்க்கணை, மாதர்களின் வசை, நிலவு போன்றவை தலைவியின் காதலை வளர்ப்பன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1297 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - படாத, பெருமாளே