பாடல் 125 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தான தனத்தன தத்தன தான தான தனத்தன தத்தன தான தான தனத்தன தத்தன ...... தனதான |
ஓடி யோடி யழைத்துவ ரச்சில சேடி மார்கள் பசப்பஅ தற்குமு னோதி கோதி முடித்தவி லைச்சுரு ...... ளதுகோதி நீடு வாச நிறைத்தஅ கிற்புழு கோட மீது திமிர்த்தத னத்தினில் நேச மாகி யணைத்தசி றுக்கிக ...... ளுறவாமோ நாடி வாயும் வயற்றலை யிற்புன லோடை மீதி னிலத்ததி வட்கையி னாத கீத மலர்த்துளி பெற்றளி ...... யிசைபாடுங் கோடு லாவி யமுத்துநி ரைத்தவை காவுர் நாட தனிற்பழ நிப்பதி கோதி லாத குறத்திய ணைத்தருள் ...... பெருமாளே. |
இளைஞர்களை ஓடி ஓடி அழைத்துவரவும், சில தோழிகள் பசப்பு மொழிகள் கூறி உபசரிக்கவும், அதற்கு முன்பு கூந்தலை வாரிச் சுருட்டி அழகாக முடிக்கவும், வெற்றிலைச் சுருளைத் திருத்தவும், நிறைந்த வாசனையை உடைய அகில், புனுகு முதலிய நறுமணம் மிகுதியாகப் பூசப்பட்ட மார்பகங்களின் மீது ஆசை வைத்து தழுவிக்கொள்ளும் பொது மகளிரின் உறவு ஓர் உறவாகுமோ? வளமை தானாகவே அமைந்த வயலிலும், நீரோடைகளிலும், இன்புறத்தக்க நிலப்பரப்பிலும், வண்டுகள் மலர்களிலிருந்த தேனை உண்டு நாத கீதத்தை இசைத்து இசைபாடும், சங்குகள் உலாவும், முத்துக்கள் வரிசையாக விளங்கும் வைகாவூர் நாட்டினில் பழநித் தலத்தில், குற்றமில்லாத வள்ளிப் பிராட்டியைத் தழுவி அருள் புரிகின்ற பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 125 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தன, தத்தன, பெருமாளே, கோதி, மீது