பாடல் 1248 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதன தாத்தனத் தனதன தாத்தனத் தனதன தாத்தனத் ...... தனதான |
திதலையு லாத்துபொற் களபம்வி டாப்புதுத் த்ரிவிதக டாக்களிற் ...... றுரகோடு சிகரம காப்ரபைக் குவடென வாய்த்துநற் சுரர்குடி யேற்றிவிட் ...... டிளநீரை மதனவி டாய்த்தனத் திளைஞரை வாட்டுசெப் பிணைமுலை மாத்தவக் ...... கொடிபோல்வார் வலையிலி ராப்பகற் பொழுதுகள் போக்குமற் றெனையுனை வாழ்த்தவைத் ...... தருள்வாயே சததள பார்த்திபற் கரிபுரு ஷோத்தமற் கெரிகன லேற்றவற் ...... குணராதோர் சகலச மார்த்தசத் தியவன சூக்ஷமுக் கியபர மார்த்தமுற் ...... புகல்வோனே கதிர்மணி நீர்க்கடற் சுழிபுகு ராக்ஷதக் கலகப ராக்ரமக் ...... கதிர்வேலா கருதிய பாட்டினிற் றலைதெரி மாக்ஷணக் கவிஞரு சாத்துணைப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1248 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, தனதன, தாத்தனத், கொண்டு, பெருமாளே, என்னும்