பாடல் 1220 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
பூபாளம்
தாளம் - அங்கதாளம் - 5
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தாளம் - அங்கதாளம் - 5
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனதனன தந்தனம் தனதனன தந்தனம் தனதனன தந்தனம் ...... தந்ததான |
இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண் கிணியிலகு தண்டையம் ...... புண்டா£கம் எனதுமன பங்கயங் குவளைகுர வம்புனைந் திரவுபகல் சந்ததஞ் ...... சிந்தியாதோ உனதருளை யன்றியிங் கொருதுணையு மின்றிநின் றுளையுமொரு வஞ்சகன் ...... பஞ்சபூத உடலதுசு மந்தலைந் துலகுதொறும் வந்துவந் துழலுமது துன்புகண் ...... டன்புறாதோ கனநிவத தந்தசங் க்ரமகவள துங்கவெங் கடவிகட குஞ்சரந் ...... தங்கும்யானை கடகசயி லம்பெறும் படியவுணர் துஞ்சமுன் கனககிரி சம்பெழுந் ...... தம்புராசி அனலெழமு னிந்தசங் க்ரமமதலை கந்தனென் றரனுமுமை யும்புகழ்ந் ...... தன்புகூர அகிலபுவ னங்களுஞ் சுரரொடுதி ரண்டுநின் றரிபிரமர் கும்பிடுந் ...... தம்பிரானே. |
வேதத் தொகுதியின் வகைகளை விதவிதமாக கொஞ்சிக் கொஞ்சி ஒலித்துக் காட்டுகின்ற சிறிய சதங்கை, கிண்கிணி, தண்டை விளங்கும் உன் அழகிய தாமரை போன்ற திருவடியை எனது மனம் என்னும் தாமரை, செங்கழுநீர், குராமலர் (இவைகளைக் கொண்டு) அலங்கரித்து இரவும், பகலும், எப்பொழுதும் தியானிக்காதோ? உனது திருவருளைத் தவிர இங்கு வேறொரு துணையும் இல்லாமல் நின்று, வேதனைப்படும் ஒரு வஞ்சகனாகிய நான் மண், நீர், தீ, காற்று, விண் ஆகிய ஐந்து பூதங்களால் ஆகிய உடலை சுமந்து, அலைந்து, உலகு ஒவ்வொன்றிலும் மீண்டும் மீண்டும் பிறந்து வந்து அலைச்சல் உறும் அந்தத் துன்பத்தைக் கண்டு (உனக்கு என் மீது) அன்பு பிறவாதோ? பெருமையுடன் உயர்ச்சியை உடைய தந்தங்களைக் கொண்டதும், உணவு உண்டைகளை உண்ணுவதும், பரிசுத்தமான, கொடிய மதம் கொண்ட, அழகுள்ள ஐராவதம் என்னும் யானை மீது வீற்றிருக்கும் தேவயானை (உனது) கங்கணம் அணிந்த மலை போன்ற திருப்புயத்தைப் பெறும்படியும், அசுரர்கள் மடியவும், முன்பு பொன்மலையாக இருந்த கிரெளஞ்சம் பாழ்பட்டு (அது இருந்த இடத்தில்) சம்புப் புல் எழவும், கடல் தீப்பற்றி வற்றும்படியாக கோபித்தவனும், போருக்கு உற்றவனுமாகிய பிள்ளை கந்தன் என்று சிவபெருமானும் பார்வதியும் (உன்னைப்) புகழ்ந்து அன்பு கூர்ந்திருக்க, சகல பூமியில் உள்ளவர்களும் தேவர்களுடன் கூட்டமாய்க் கூடி நின்று, திருமாலும், பிரமனும் வணங்கும் தலைவனே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1220 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தனம், தனதனன, மீண்டும், மீது, இருந்த, ஆகிய, அன்பு, உனது, தாமரை, என்னும், தகிட, நின்று