பாடல் 1214 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தான தான தனத்தன தான தான தனத்தன தான தான தனத்தன ...... தனதான |
ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள் ஆவி சோர வுருக்கிகள் ...... தெருமீதே யாவ ரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர் ஆல கால விழிச்சிகள் ...... மலைபோலு மாசி லாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர் வாரி யோதி முடிப்பவர் ...... ஒழியாமல் வாயி லூற லளிப்பவர் நாளு நாளு மினுக்கிகள் வாசல் தேடி நடப்பது ...... தவிர்வேனோ ஓசை யான திரைக்கடல் ஏழு ஞால முமுற்றருள் ஈச ரோடு றவுற்றவள் ...... உமையாயி யோகி ஞானி பரப்ரமி நீலி நார ணியுத்தமி ஓல மான மறைச்சிசொல் ...... அபிராமி ஏசி லாத மலைக்கொடி தாய்ம னோம ணிசற்குணி ஈறி லாத மலைக்கொடி ...... அருள்பாலா ஏறு மேனி யொருத்தனும் வேத னான சமர்த்தனும் ஈச னோடு ப்ரியப்படு ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1214 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தன, பெருமாளே, உடையவர்கள், தேவி, உடையவள், மலைக்கொடி, ஞானி, ரோடு, வாரி, நாளு, தேடி