பாடல் 1207 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனத்த தத்தனா தனத்த தத்தனா தனத்த தத்தனா ...... தனதான |
அருக்கி மெத்ததோள் திருத்தி யுற்றுமார் பசைத்து வக்குமா ...... லிளைஞோரை அழைத்து மிக்ககா சிழைத்து மெத்தைமீ தணைத்து மெத்தமா ...... லதுகூர உருக்கி யுட்கொள்மா தருக்கு ளெய்த்துநா வுலற்றி யுட்குநா ...... ணுடன்மேவி உழைக்கு மத்தைநீ யொழித்து முத்திபா லுறக்கு ணத்ததா ...... ளருள்வாயே சுருக்க முற்றமால் தனக்கு மெட்டிடா தொருத்தர் மிக்கமா ...... நடமாடுஞ் சுகத்தி லத்தர்தா மிகுத்த பத்திகூர் சுரக்க வித்தைதா ...... னருள்வோனே பெருக்க வெற்றிகூர் திருக்கை கொற்றவேல் பிடித்து குற்றமா ...... ரொருசூரன் பெலத்தை முட்டிமார் தொளைத்து நட்டுளோர் பிழைக்க விட்டவோர் ...... பெருமாளே. |
அருமை பாராட்டி நன்றாகத் தோள்களை ஒழுங்கு படுத்தியும், மார்பை அசைத்தும், தம்மைக் கண்டு மகிழ்ந்து மோகம் கொண்ட இளைஞர்களை அழைத்து, நிரம்பப் பணத்தை அவர்கள் தரச்செய்து, மெத்தையின் மீது அணைத்து, நிரம்பக் காமம் மிகும்படி அவர்கள் மனதை உருக்கி தம் வசப்படுத்தும் விலைமாதர்களுக்கு நான் இளைப்புற்று, நா வறண்டு, அஞ்சி, நாணம் கொண்டவனாக இருந்து, காலம் தள்ளுவதை நீ ஒழித்து அருள, முக்தி வீட்டை நான் அடைய, அந்த மேன்மை தங்கிய திருவடியைத் தந்து அருள்வாயாக. குறள் வடிவத்தில் வாமனராக வந்த (பின் வானளவு உயர்ந்த) திருமாலாலும் அளவிட முடியாத ஒப்பற்ற பெருமான், மிகச் சிறந்த நடனம் ஆடும் இன்பம் கொண்ட சிவபெருமானுக்கு மிக்க பக்தி முதிர்ந்து பெருக ஞானத்தை (மூலப் பொருளை) உபதேசித்து அருளியவனே, நிரம்ப வெற்றியே மிக்க அழகிய கரத்தில் வீர வேல் கொண்டு, குற்றங்கள் நிறைந்த ஒப்பற்ற சூரனுடைய பலத்தைத் தாக்கி, அவனது மார்பைத் தொளைத்து, நட்புடைய தேவர்கள் பிழைக்க அந்த வேலைச் செலுத்திய ஒப்பற்ற பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1207 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்த, ஒப்பற்ற, தத்தனா, நான், அந்த, கொண்ட, மிக்க, பிழைக்க, அழைத்து, உருக்கி, தொளைத்து, பெருமாளே