பாடல் 117 - பழநி - திருப்புகழ்

ராகம் - .....; தாளம் -
தனதனன தானான தானதன தந்த தனதனன தானான தானதன தந்த தனதனன தானான தானதன தந்த ...... தனதான |
இருகனக மாமேரு வோகளப துங்க கடகடின பாடீர வாரமுத கும்ப மிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு ...... குவடேயோ இலகுமல ரேவாளி யாகியஅ நங்க னணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்த இளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்து ...... தணியாமல் பெருகியொரு காசேகொ டாதவரை யைந்து தருவைநிக ரேயாக வேயெதிர்பு கழ்ந்து பெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து ...... நிலைகாணாப் பிணியினக மேயான பாழுடலை நம்பி உயிரையவ மாய்நாடி யேபவநி ரம்பு பிறவிதனி லேபோக மீளவுமு ழன்று ...... திரிவேனோ கருணையுமை மாதேவி காரணிய நந்த சயனகளி கூராரி சோதரிபு ரந்த கடவுளுடன் வாதாடு காளிமலை மங்கை ...... யருள்பாலா கருடனுடன் வீறான கேதனம்வி ளங்கு மதிலினொடு மாமாட மேடைகள்து லங்கு கலிசைவரு காவேரி சேவகனொ டன்பு ...... புரிவோனே பரவையிடை யேபாத காசுரர்வி ழுந்து கதறியிட வேபாக சாதனனு நெஞ்சு பலிதமென வேயேக வேமயிலில் வந்த ...... குமரேசா பலமலர்க ளேதூவி யாரணந வின்று பரவியிமை யோர்சூழ நாடொறுமி சைந்து பழநிமலை மீதோர்ப ராபரனி றைஞ்சு ...... பெருமாளே. |
* ஐந்து தேவ தருக்கள்: சந்தானம், அரிச்சந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம்.
** கலிசை என்னும் ஊரில் அக்காலத்துத் தலைவனாக இருந்த ஒரு அன்பன். அருணகிரிநாதரின் நண்பன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 117 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அணிந்த, தனதனன, பெரிய, தந்த, தானான, தானதன, ஐந்து, மீது, என்னும், மகிழ்ந்து, ஊரில், கலிசை, மேல், பெருமாளே, நாடொறுமி, ழுந்து, நம்பி, திரிவேனோ, வந்த, காவேரி, இரண்டு