பாடல் 116 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தனதனன தானான தனதனன தனதனன தனதனன தானான தனதனன தனதனன தனதனன தானான தனதனன ...... தனதான |
இரவியென வடவையென ஆலால விடமதென உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி ...... லதுகூவ எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு ...... வசைபேச அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள் அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக ...... மெலிவானாள் அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை ...... வருவாயே நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல் நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் ...... மருகோனே நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி கவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனி நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை ...... யருள்பாலா பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத பதுமகர தலமுருக நால்வேத கரரணிக ...... மயில்வீரா பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் ...... பெருமாளே. |
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.சந்திரன், குயில், மன்மதன், மலர்ப் பாணங்கள், கடல் ஓசை, குழல் ஓசை, மாடுகளின் மணி ஓசை, மகளிர் வசைப் பேச்சு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 116 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, வந்து, மிகவும், தானான, எல்லாம், போர், இப்பெண், தாமரை, மூன்று, உடைய, கரங்களை, புரிந்து, உள்ள, சொல்லும்படியும், பெருமாளே, அவசமுற, கொடிய, மன்மதன், ஓசையும், குயில், மாடுகளின்