பாடல் 1144 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...... ; தாளம் -
தத்த தனதனன தான தானதன தத்த தனதனன தான தானதன தத்த தனதனன தான தானதன ...... தனதான |
எத்தி யிருகுழையை மோதி மீனமதின் முட்டி யிடறியம தூதர் போலமுகி லெட்டி வயவர்கர வாளை வேல்முனையை ...... யெதிர்சீறி எத்தி சையினுமொரு காம ராஜன்மிக வெற்றி யரசுதனை யாள வீசியட லெற்றி யிளைஞருயிர் கோலு நீலவிழி ...... மடமாதர் வித்தை தனிலுருகி யாசை யாகியவர் கைக்குள் மருவுபொரு ளான ஆகும்வரை மெத்தை தனிலுருகி மோக மாகிவிட ...... அதன்மேலே வெட்க மிலைநடவு மேகு மேகுமினி மற்ற வரையழையு மாத ரேயெனமுன் விட்ட படிறிகள்தம் நேச ஆசைகெட ...... அருள்வாயே ஒத்த வரிகமுகு வாளை தாவுபுனல் அத்தி நகரமர சான வாள்நிருபன் ஒக்கு நினைவுமுனி லாமல் வாகுபெல ...... நிலைகூற உற்ற தருமனடல் வீமன் வேல்விசையன் வெற்றி நகுலசக தேவர் தேர்தனிலும் ஒத்து முடுகிவிடு பாகன் வாளமரி ...... லசுரேசன் பத்து முடிகள்துக ளாக வாகுஇரு பத்து மொருகணையில் வீழ நேரவுணர் பட்டு மடியஅமர் மோது காளமுகில் ...... மருகோனே பச்சை மயிலில்வரு வீர வேல்முருக துட்ட நிருதர்குல கால வானவர்கள் பத்தி யுடனடியில் வீழ வாழ்வுதவு ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1144 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வாளை, தத்த, தானதன, தனதனன, வேல், ஏந்திய, தனது, போய்விடும், அசுரர்கள், இட்டு, உடைய, கரிய, பச்சை, வெற்றி, எத்தி, தனிலுருகி, விட்ட, பெருமாளே, பத்து, தாக்கி