பாடல் 113 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன ...... தனதான |
ஆல காலமெ னக்கொலை முற்றிய வேல தாமென மிக்கவி ழிக்கடை யாலு மோகம்வி ளைத்துவி தத்துட ...... னிளைஞோரை ஆர வாணைமெ யிட்டும றித்துவி கார மோகமெ ழுப்பிய தற்குற வான பேரைய கப்படு வித்ததி ...... விதமாகச் சால மாலைய ளித்தவர் கைப்பொருள் மாள வேசிலு கிட்டும ருட்டியெ சாதி பேதம றத்தழு வித்திரி ...... மடமாதர் தாக போகமொ ழித்துஉ னக்கடி யானென் வேள்விமு கத்தவ முற்றிரு தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட ...... அருள்வாயே வால மாமதி மத்தமெ ருக்கறு காறு பூளைத ரித்தச டைத்திரு வால வாயன ளித்தரு ளற்புத ...... முருகோனே மாய மானொட ரக்கரை வெற்றிகொள் வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு வாளி யேவிய மற்புய னச்சுதன் ...... மருகோனே நாலு வேதந விற்றுமு றைப்பயில் வீணை நாதனு ரைத்தவ னத்திடை நாடி யோடிகு றத்தித னைக்கொடு ...... வருவோனே நாளி கேரம்வ ருக்கைப ழுத்துதிர் சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு ஞான பூரண சத்தித ரித்தருள் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 113 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, தானன, கொண்டு, பெருமாளே, உள்ள, வீணை, சாதி, முருகோனே, பூரண