பாடல் 1127 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
கீரவாணி
தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த ...... தனதான |
ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து மாவாகன மாமந் திரத்து ...... மடலாலும் ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து மாமாறெரி தாமிந் தனத்து ...... மருளாதே நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த நீநானற வேறின்றி நிற்க ...... நியமாக நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்தி நேரேபர மாநந்த முத்தி ...... தரவேணும் வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க வேதாளச மூகம் பிழைக்க ...... அமராடி வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்க வேர்மாமர மூலந் தறித்து ...... வடவாலும் வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து வாணாசன மேலுந் துணித்த ...... கதிர்வேலா வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து வானோர்பரி தாபந் தவிர்த்த ...... பெருமாளே. |
* பிரளய காலத்தில் உலகம் அழியுமுன் வட துருவத்திலிருந்து வரும் நெருப்பு அலையை 'வடவாக்கினி' என்பர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1127 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கண்டும், தானந், தானாதன, வாருங்கள், தனத்த, என்றும், நிலையையும், உரியவனே, அழைத்து, செய்யும், சக்ர, குடித்து, பெருமாளே, பெரிய