பாடல் 1100 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் ...... தனதான |
அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ் சன்பிலன் துன்பவன் ...... புகழ்வாரா அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென் றுஞ்சுமந் தங்குமிங் குந்திரிந் ...... திரைதேடுஞ் சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ் சஞ்சலன் கிஞ்சுகந் ...... தருவாயார் தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின் தண்டையம் பங்கயம் ...... புகழ்வேனோ கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங் கங்களுங் திங்களுங் ...... கழுநீருங் கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங் கந்தமுந் துன்றுசெஞ் ...... சடையாளர் பங்குதங் கும்பசுங் கொம்புதந் தின்புறும் பந்தவெங் குண்டர்தங் ...... குலகாலா பண்டிதன் கந்தனென் றண்டரண் டந்தொழும் பண்புநண் பும்பெறும் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1100 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தனந், இல்லாதவன், உடைய, அணிந்த, சிவந்த, கொடிய, புகழ்வேனோ, பெருமாளே