பாடல் 1095 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதான |
வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென வயிரமர கதமகர ...... மளவாக வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி வளையிளைஞ ருயிர்கவர ...... வருமாய இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி எழுபிறவி நெறியொழிய ...... வழிகாணா இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுன திருநயன கருணைசிறி ...... தருள்வாயே பதயுகள மலர்தொழுது பழுதில்பொரி அவல்துவரை பயறுபெரு வயிறுநிறை ...... யவிடாமுப் பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை பரியதனி யெயிறுகொடு ...... குருநாடர் கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடிய கடலுலகு நொடியில்வரு ...... மதிவேகக் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. |
* உலகெல்லாம் சுற்றி வரும் முருகனின் மயிலின் வேகத்தைக் கண்டு விநாயக யானை அஞ்சிப் பிளறினதாகக் கூறப்பட்டுள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1095 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, யானை, கொண்டு, உள்ள, வேகத்தைக், ஆகிய, பெருமாளே