பாடல் 1093 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன ...... தனதான |
குடருமல சலமுமிடை யிடைதடியு முடையளவு கொழுவுமுதி ரமும்வெளிற ...... ளறுமாகக் கொளகொளென அளவில்புழு நெளுநெளென விளைகுருதி குமுகுமென இடைவழியில் ...... வரநாறும் உடலில்மண மலிபுழுகு தடவியணி கலமிலக வுலகமரு ளுறவரும ...... ரிவையாரன் பொழியவினை யொழியமன மொழியஇரு ளொழியஎன தொழிவிலக லறிவையருள் ...... புரிவாயே வடகனக சயிலமுத லியசயில மெனநெடிய வடிவுகொளு நெடியவிறல் ...... மருவாரை வகிருமொரு திகிரியென மதிமுதிய பணிலமென மகரசல நிதிமுழுகி ...... விளையாடிக் கடலுலகை யளவுசெய வளருமுகி லெனஅகில ககனமுக டுறநிமிரு ...... முழுநீலக் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. |
முருகனின் வாகனமான மயிலின் சிறப்பை உணர்த்தி அதனை திருமாலுடன் ஒப்பிடும் பாடல் இது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1093 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனதன, என்னும்படி, ஆகிய, உள்ள, நெளு, பெருமாளே, நிறம், குமு